நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது

neet-question-paper-leak-issue-school-principal-vice-principal-arrested-in-jharkhand
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-06-28 21:51:00

ராஞ்சி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது.

இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் குஜராத்தைச் சேர்ந்த 3 தேர்வர்களிடம் வினாத்தாள் கசிவு தொடர்பாக வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த பள்ளியின் முதல்வர் இசானுல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகிய இருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 5 நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next