3 நாட்களில் இத்தனை கோடி ரூபாய் வசூலா..? சாதனை படைக்கும் கல்கி திரைப்படம்!
பிரபாஸ் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் 3 நாட்களில் மிகப்பெரும் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இதனால் பட குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகேன், திஷா பதானி, துல்கர் சல்மான், ராஜமெளலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில், 191 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
2 ஆம் நாளான நேற்று முன் தின நிலவரப்படி இந்த படம் ரூ. 298.5 கோடி ரூபாய் வசூலித்திருந்த நிலையில், நேற்றுடன் மொத்தம் 3 நாட்களில் மட்டும் கல்கி திரைப்படம் ரூ. 415 கோடி ரூபாய்க்கும் கலெக்சன் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தின் தொடர்ச்சியாக, அதில் உள்ள சில கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக கல்கி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின். அதுவும் 2898ஆம் ஆண்டில் நடப்பது போன்ற ஒரு கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறார். இதற்காக ஒரு புதிய உலகத்தையே உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
மகாபாரதத்தில் முடிவில் இருந்து, கலியுகத்தின் கல்கி அவதாரத்தை நோக்கி கதை நகர்கிறது. இந்த உலகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. அதில் உலகத்தின் கடைசி நகரமாக காசி உள்ளது. கங்கை வறண்டு விடுகிறது, நல்ல காத்து கிடையாது, குடிக்க தண்ணீர் கிடையாது, உலகத்தை காப்பாற்ற கடவுள் வர வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அதற்கான சூழல் ஏற்படுகிறது, ஆனால் அந்த குழந்தையை அழிக்கும் நினைக்கும் கூட்டம் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து கடவுளாகிய குழந்தையை காப்பாற்றும் பணி அமிதாப் பச்சன் இடம் உள்ளது. இதை சுற்றி என்ன நடக்கிறது? இறுதியில் என்ன ஆனது? என்பதே ‘கல்கி 2898AD’ படத்தின் முதல் பாக கதை.
தற்போது முதல் பாகம் வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் 2 ஆம் பாகத்திற்கு வெயிட் பண்ணுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.