மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை... யார் இவர்?

bihar-gold-man-prem-singh-photos-and-videos-viral-on-social-media
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 17:26:00

மதுரைக்கு ஒரு வரிச்சூர் செல்வம் போல, பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடையாக பிரேம் சிங் என்பவர் திகழ்ந்து வருகிறார்.

பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பிரேம் சிங், தனது உடலில் 5 கிலோவிற்கு மேல் நகைகளை அணிந்துள்ளார். மேலும், தனது பைக்கை 150 முதல் 200 கிராம் வரை தங்கத்தாலே அலங்கரித்துள்ளார் இந்த பிரேம் சிங்.

நகையை வீட்டில் வைப்பதற்கே அச்சப்படும் சூழலில், நிதிஷ் குமார் ஆட்சியில் பிகாரில் திருட்டு பயம் இல்லை என்று பிரேம் சிங் கூறுகிறார். கோடிக்கணக்கான ரூபாயில் நகைகளை வாங்கி அணிவது தனது பொழுதுபோக்கு என்று பிரேம் சிங் தெரிவித்தார். இவரை அம்மாநில மக்கள், அன்போடும், சற்று பொறாமையோடும் தங்கமனிதன் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next