காதல் தோல்வி: பொம்மையோடு குடும்ப நடத்தும் வங்காள இளைஞர்

love-failure-bengali-youth-runs-a-family-with-a-doll-toy-girl-friend-gwi
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 17:27:00

இணையத்தில் தினமும் பல காதல் கதைகளை பார்க்கிறோம். அதில் பெரும்பாலானவை வைரலும் ஆகின்றன. சமீபத்தில் இதேப்போன்ற ஒரு காதல் கதை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. நாம் எதிர்ப்பார்ப்பதை விட இந்த காதல் கதை கொஞ்சம் வித்தியாசமானது.

இதில் காதலர் தன் காதலியை நாள் முழுவதும் தனது இடுப்போடு சேர்த்து கட்டியபடியே அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால் நாம் நினைப்பது போல் அந்த ‘காதலி’ உண்மையான பெண் அல்ல. அதுவொரு பிளாஸ்டிக் பொம்மை.

இந்த நபருக்கு இதுவரை எந்தவொரு பெண் தோழியும் இல்லை. இதனால் இத்தனை ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்து அவருக்கு போரடித்துவிட்டது போல. இதனால் தனக்கு நம்பிகையான பெண் தோழி வேண்டும், அதே சமயத்தில் அவள் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு யாரோடும் செல்லக்கூடாது என்று நினைத்த அந்த நபர், ஒரு பொம்மையை தனது காதலியாக மாற்றிக்கொண்டார்.

இந்த பொம்மைக்கு பிங்கி என்றும் பெயர் வைத்துள்ளார். ஒரு பிளாஸ்டிக் பொம்மை மீது காதல் கொண்ட இந்த இளைஞரின் பெயர் வித்யுத் மண்டல். இவர் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்பாரா என்ற ஊரைச் சேர்ந்தவர். சமீபத்தில் பக்ரீத் பெருநாளின் போது தனது பொம்மை காதலியோடு வித்யுத் பைக்கில் சென்ற வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இந்த பொம்மையை கடந்த அறு மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறுகிறார் இந்த இளைஞர்.

எங்கள் உறவுமுறை குறித்து மற்றவர்கள் குறை கூறுவதையோ, கிண்டல் செய்வதையோ, கேள்வி கேட்பதையோ நான் கண்டுகொள்வதேயில்லை. என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை எனக் கூறுகிறார் வித்யுத். இவர் பைக்கில் எங்கு சென்றாலும் தனது ‘காதலியையும்’ பின்னால் அமர்த்திக்கொண்டு கூடவே அழைத்துச் செல்கிறார்.

மணமகனுக்கும் மணமகளுக்கு இடையே நடைபெறுவதே திருமணம். இப்போதெல்லாம் திருமணங்கள் உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இப்போது நாம் பார்த்த சம்பவம் போலவே கொலம்பியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்டியன் என்ற பெயர் கொண்ட அந்த நபர் பொம்மையோடு தான் குடும்பஸ்தராக வாழ்ந்து வருகிறார். இப்போது இவர்கள் இருவருக்கும் மூன்று பொம்மை குழந்தைகள் வேறு இருக்கிறார்களாம். இவருடைய மனைவி, அதாவது நடாலியா என்ற அந்த பொம்மையோடுதான் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் விருந்துகளுக்கும் சென்று வருகிறார் கிறிஸ்டியன்.

இதற்கு முன் ஒரு பெண்ணை நான் காதலித்து வந்தேன். ஆனால் சில கரணங்களால் அந்த உறவு முறிந்து போனது. என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டுவிட்டு இன்னொருவருடன் பழக ஆரம்பித்துவிட்டார். அதன்பின்னர் பல நாட்கள் நான் தனிமையில் தவித்து வந்தேன். வேறு எந்தப் பெண்ணோடு பழகவும் தோணவில்லை. அந்த சமயத்தில் தான் நடாலியா என்ற பொம்மை மீது காதலில் விழுந்தேன் எனக் கூறி ஆச்சர்யப்படுத்துகிறார் கிறிஸ்டியன்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next