சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு

blast-in-firecracker-factory-near-satur-3-killed
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-06-29 09:26:00

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை முன்னேற்பாடுகளில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 அறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளே சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next