“கடந்த 6 மாதங்கள்..” உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஓபனாக பேசிய ஹர்திக் பாண்டியா!

cricket-hardik-pandya-opens-up-after-t20-world-cup-finals
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 15:19:00

ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் பல ஆண்டுகள் விளையாடியது அற்புதமான நிகழ்வு என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் 11 ஆண்டுகால உலகக்கோப்பை கனவு நிறைவேறியுள்ளது.

பேட்டிங்கில் விராட் கோலி, அக்சர் படேல், ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும், பவுலிங்கில் முக்கிய நேரத்தில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஹர்சதீப் சிங் ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மேலும் சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச் ஆட்டத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்து வெற்றியை தேடி தந்தது.

போட்டிக்கு பிறகு பேசிய ஹர்த்திக் பாண்டியா, இந்த உணர்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எப்போதும் கனவாக இருந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் எதோ ஒன்று குறையாகவே இருந்தது. ஆனால் இன்று நாட்டிற்கு எது தேவையோ அதை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

கடந்த 6 மாதங்கள் குறித்து நான் எதுவும் பேசவே இல்லை. வாழ்க்கையில் சூழ்நிலைகளை பொறுத்தே பதிலளிக்க முடியும். ஆனால் கடுமையாக உழைத்தால், நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என எனக்கு தெரியும். அதற்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பு அமைந்ததால் இந்த வெற்றி இன்னும் சிறப்பாக இருந்தது. எங்களுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்தி, எதிரணியினருக்கு அழுத்தம் கொடுத்தாலே வெற்றி பெறலாம் என நம்பிக்கை எங்களுக்கு இருந்தது என தெரிவித்தார்.

மேலும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் டி-20 உலகக் கோப்பையை பெற நிச்சயம் தகுதியானவர்கள் என்றும், அவர்கள் இருவருக்கும் நாங்கள் கொடுக்கும் சிறந்த பேஃர்வெல் இதுவாகத்தான் இருக்க முடியும் என்றுகூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next