டி.என்.பி.எல்.: நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு

tnpl-trichy-won-the-toss-against-nellai-and-opted-to-bowl
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-20 18:54:00

நெல்லை,

8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது. முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இதனையடுத்து இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இங்கு 6 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next