ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை - தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு
சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்தநிலையில் தலைமை ஆசிரியர்கள் விளக்கமளிக்குமாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவா என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக 17 (A) விதியின் கீழ் விளக்கம் அளிக்க சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.