ஒரு மாநிலத்தில் தடைசெய்யப்படும் போதைப்பொருள் மற்றொரு மாநிலத்தில் தடையில்லை ஏன் - உயர்நீதிமன்றம் கேள்வி
ஒரு மாநிலத்தில் தடைசெய்யப்படும் போதைப்பொருள் மற்றொரு மாநிலத்தில் தடை செய்யப்படாத நிலைமை ஏன் நிலவுகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தடை செய்யப்பட்ட கூல் லிப் உள்ளிட்ட போதைப்பொருட்களான விற்றது தொடர்பான வழக்கில் ஜாமின் கோரி தொடரப்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஒரு மாநிலத்தில் தடைசெய்யப்படும் போதைப் பொருள் மற்றொரு மாநிலத்தில் தடை செய்யப்படாத நிலைமை ஏன் நிலவுகிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மாணவர்கள் உள்ளிட்டோரை பாதிக்கும் கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் நிறுவனங்களின் பதிலைப் பெறாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.