ஆயுத முனையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! - மணிப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

manipur-minister-pa-abducted-tension-raise-in-manipur
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 22:05:00

இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரம் கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் துவங்கி ஒன்றரை ஆண்டு கடந்த பிறகும் கூட அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தின் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் கடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக எல். சுசிந்த்ரோ செயல்பட்டு வருகிறார். இவரின் உதவியாளராக சாரங்தெம் சோமோரென்ட்ரோ என்பவர் இருந்துவருகிறார். இந்நிலையில், இன்று காலை 7.48 மணி அளவில் சாரங்தெம் சோமோரென்ட்ரோ ஆயுதம் ஏந்திய ஒருவரால் கடத்தப்பட்டுள்ளார். இதனை அங்கிருந்த பெண் ஒருவர் பார்த்துள்ளார்.

இதுவரை கடத்தியது யார் என்பது தெரியவில்லை. அதேசமயம் அவரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கையும் போலீஸார் மேற்கொண்டு வருவதாக அந்த மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும், சிலரை கண்காணித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Ads
Trending News
Recent News
Prev
Next