நவராத்திரியின் 9 நாட்களுக்கு ஷயன் ஆரத்தி நடைபெறாது: ஹர்சித்தி கோயிலின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்..!!
அம்மன் வழிபாட்டின் திருவிழாவான ஷாரதியா நவராத்திரி (Sharadiya Navratri) அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து, நவராத்திரி திருவிழா தொடங்கியது. இந்நிலையில் உஜ்ஜைனில் உள்ள சக்திபீடமான ஹர்சித்தி கோயிலிலும் அக்டோபர் 3ஆம் தேதி காலை கதஸ்தாபனத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, நவராத்திரியின் ஒன்பது நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். கோவிலின் பாரம்பரியத்தின் படி, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஹர்சித்தி அம்மன் உறங்குவதில்லை, எனவே ஷயன் ஆரத்தி நடைபெறாது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இரவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். காலை 7 மணிக்கும், மாலை 7 மணிக்கும் ஆரத்தி நடைபெறும். நவராத்திரியின் போது தினமும் இரவு 7 மணிக்கு கூட்டு தீபம் ஏற்றப்படும். இதுகுறித்து பூசாரி ராஜேஷ் கோஸ்வாமி, கோவிலின் சிறப்பு பாரம்பரியம் பற்றி கூறுகிறார்.
அன்னையின் வலது முழங்கை இங்கே விழுந்தது:
ஹர்சித்தி கோயில் நாட்டின் 52 சக்திபீடங்களில் ஒன்றாகும். புராணத்தின் படி, தக்ஷ் பிரஜாபதியின் யாகத்தில் நெருப்பை மூட்டியபோது, தன்னையும், தன் அன்னையையும் அழைக்காததால் கோபமடைந்த அன்னை, யாகத்திலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் தன்னைத்தானே எரித்துக் கொண்டார். தனது மனைவி இறந்ததால் சிவபெருமான் கோபமடைந்து, நந்தியின் உதவியுடன் தக்ஷனின் யாகத்தை அழித்தார்.
பிறகு சிவபெருமான் அன்னையின் உடலை சுமந்து சென்றார். அன்னையின் உடல் உறுப்புகள் எங்கெல்லாம் விழுந்ததோ அங்கெல்லாம் சக்திபீடங்கள் நிறுவப்பட்டன. உஜ்ஜயினியில், அன்னையின் வலது முழங்கை விழுந்ததால், சக்திபீடம் இங்கு நிறுவப்பட்டது, எனவே அதை ஹர்சித்தி கோயில் என்று அழைக்கப்படுகிறது. மாதா ஹர்சித்தி ஸ்ரீயந்திரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்குகிறாள், எனவே அவள் “ஹர்சித்தி” என்று அழைக்கப்படுகிறாள்.
ஒன்பது நாட்களுக்கு ஷயன் ஆரத்தி நடைபெறாது: ஹர்சித்தி கோயிலில் நவராத்திரியின் போது தேவியின் தூய சாத்விக் சக்தி வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்களிலும், தேவிக்கு மாதுளை விதைகள், தேன் மற்றும் இஞ்சி ஆகியவை சமர்பிக்கப்படுகின்றன. மாதா ஹர்சித்தி ஒன்பது நாட்கள் தூங்குவதில்லை என்பதால், இந்த நாட்களில் ஷயன் ஆரத்தி செய்யப்படுவதில்லை.
2000 ஆண்டுகள் பழமையான விளக்குத் தூண்கள்: ஹர்சித்தி கோயிலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதன் 2000 ஆண்டுகள் பழமையான விளக்குத் தூண்கள் ஆகும், அதன் உயரம் 51 அடி ஆகும், இதில் மொத்தம் 1011 விளக்குகள் உள்ளன. இந்த விளக்குத் தூண்களில் உள்ள தீபங்களை ஏற்றுவதற்கு, பக்தர்கள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர். தீபம் ஏற்றுவதற்கு தோராயமாக ரூ.14,000 செலவிடப்படுகிறது. உஜ்ஜயினியைச் சேர்ந்த ஜோஷி குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளாக இந்த விளக்குத் தூண்களை ஏற்றி வருகின்றனர். ஒவ்வொரு விளக்கையும் ஏற்றுவதற்கு 4 கிலோ பருத்தி மற்றும் 60 லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது.
5 நிமிடங்களில் 1011 விளக்குகள் எரிகின்றன: நவராத்திரியின் போது, இரவு 7 மணிக்கு ஹர்சித்தி கோயிலில் ஆரத்தி நடைபெறுகிறது. ஆரத்தி நடைபெறுவதற்கு முன், 6 பேர் விளக்கு தூண்களை சுத்தம் செய்து, விளக்கேற்றுவதற்கு தயார் செய்கிறார்கள். இதனையடுத்து 5 நிமிடங்களில் விளக்குத் தூண்களில் உள்ள 1011 விளக்குகளும் ஏற்றப்படுகின்றன, இந்நேரத்தில் இந்த அற்புதமான காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள்.