தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி.. சென்னையில் எல்.முருகன் பங்கேற்பு
தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதியான இன்று 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்தியது.
முன்னதாக தமிழ்நாட்டில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த அமைப்பின் நிர்வாகியான கார்த்திகேயன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் 58 இடங்களில் 52 இடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களில் மட்டும் அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தது.
இதனைக் கேட்ட உயர்நீதிமன்றம், “தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு கூட்டம் ஏன் நடத்தக் கூடாது. தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்” என்றும் கேள்வி எழுப்பி, தமிழ்நாடு முழுவதும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து பங்கேற்றார்.