கலர்ஸ் தமிழ் : காதலன் மோகனை மீட்கப் போராடும் தியா… பரபரப்பான கட்டத்தில் மோகினி ஆட்டம் ஆரம்பம்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோகினி ஆட்டம் ஆரம்பம் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால் அதற்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
நிஷாந்தியின் சூழ்ச்சியால் மோகனை மாய மோகினியின் பிடியில் இழக்கும் தியா, மோகினியின் மந்திரங்களின் பின்னணி கண்டறிந்து அவளை தோற்கடிக்க முடிவெடுக்கிறாள்.
மோகன் நிஷாந்தியை மணந்துவிட முன்வர, தியா மனம் உடைகிறாள். பின்னர், நிஷாந்தியின் அறையில் ஒரு மர்மமான பெட்டியைக் காணும் தியாவுக்கு நிஷாந்தி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. தியா, நிஷாந்தியின் உண்மையான உருவத்தை அனைவருக்கும் வெளிப்படுத்த புனித நீரைக் கொண்டு அவள்மேல் ஊற்ற முயற்சிக்கிறாள்.
நிஷாந்தி ஒரு மோகினி என்பதை தெரிந்துகொள்ளும் தியா, அதே வேளையில், அவள் தன் தாயின் கடந்த காலத்தைப் பற்றியும் அவர் ஒரு மோகினியை எப்படி தோற்கடித்தார் என்பதையும் அறிந்து கொள்கிறாள். நிஷாந்தியை தோற்கடித்து தன் தாயின் கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதில் தியா உறுதியாக இருப்பதால், அவளது முயற்சியில் வெற்றி பெருவாளா?
இந்த மோகினியை எதிர்த்து, தியா தன்னுடைய காதலன் மோகனை மீட்கும் போராட்டத்தை கண்டுகளிக்க மறவாதீர்கள் “மோகினி ஆட்டம் ஆரம்பம்” திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் தமிழில்!