10ம் வகுப்புத் தேர்ச்சியா... கைநிறைய சம்பளம்...NABARD வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
நபார்டு (NABARD) வங்கி எனப்படும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிககான தேசிய வங்கி நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்கும் அமைப்பாகவும், அதன் மூலம் ஊரக பகுதிகளில் விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு அறிக்கையில் மொத்தமாக 108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்: குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக மாதம் 35000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Ads
Recent All News News
Trending News
Recent News