ஆபாச வீடியோ சர்ச்சை.. அதிரடியாக முடிவெடுத்து சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஓவியா..
‘களவாணி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘மெரினா’, ‘கலகலப்பு’, ‘மூடர் கூடம்’, ‘யாமிருக்க பயமேன்’, ‘90ml’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. சரியான படவாய்ப்பு இல்லாதபோது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் வந்து குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி உலகளவில் இருந்த தமிழர்கள் பிக் பாஸ் மூலம் ஓவியாவுக்கு ரசிகர்களானார்கள்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக அது அவர் இல்லை, மார்ப் செய்யப்பட்ட வீடியோ என்று கூறிவந்த நிலையில், மற்ற பலர் ஓவியாவின் இன்ஸ்டாகிராம் கமெண்டில் “மேடம் வீடியோ ஒன்னு வந்திருக்கு’’, நீளம் கம்மியா இருக்கு” என்று நக்கல் அடிக்குமாறு செய்த கமெண்டுகளுக்கு, “என்ஜாய்’’, ‘‘நெக்ஸ்ட் டைம்” என்று பதிலடி கொடுக்கும் வகையில் ஓவியா செய்த ரிப்ளை இணையத்தில் பலரது கவனத்தைப் பெற்று வைரலானது.
இதையடுத்து இந்த ஆபாச வீடியோ குறித்து சென்னை கமிஷனரிடம் நடிகர் ஓவியா புகாரளித்துள்ளார். அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும், ஓவியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றே தயார் செய்யப்பட்ட வீடியோ என்றும் அவரது மேலாளர் கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறு தவறான வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஓவியா தீர்க்கமாக இருந்ததாகவும், ஆனால் பிரச்சனையின் தீவிரம் தெரிந்து அவர்களின் விவரங்களை வெளியிடாமல் அவர் இருப்பதாகக் கூறினார்.