டி20 உலகக்கோப்பையை 11 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் - ரோகித் சர்மா

dedicating-the-t20-world-cup-to-the-fans-who-have-been-waiting-for-11-years-rohit-sharma
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-05 06:16:00

மும்பை,

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பிரமாண்டமான பேரணி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கோப்பையை வென்றதற்காக ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினர்.

இந்த நிகழ்வில் ரசிகர்கள் மத்தியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் 'சிறப்பு வாய்ந்த இந்த அணியை வழிநடத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

மும்பை ஒரு போதும் ஏமாற்றம் அளித்தது கிடையாது. ரசிகர்களின் வரவேற்பு மெய்சிலிர்க்க வைத்தது. அணி சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றி கோடிக்கணக்கான மக்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை ஒட்டுமொத்த தேசத்திற்குரியது. ஐ.சி.சி. கோப்பைக்காக கடந்த 11 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்' என்று கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next