பூமிக்கு அடியில் 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ந்த துருக்கி - பீதியான மக்கள்!
துருக்கியின் கிழக்குப்பகுதியில் மலத்யா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக அது பதிவானது. பூமிக்கு அடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கியை ஒட்டிய சிரியாவின் அலெப்போ நகரிலும் உணரப்பட்டது.
கடந்தாண்டு பிப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். முதல் கட்டமாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எதுமாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்னும் தெரியவில்லை.
Ads
Recent International News
Trending News
Recent News