பாலியல் புகார் எதிரொலி... நடன இயக்குநர் ஜானி மீது தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையின் அதிரடி நடவடிக்கை!
பாலியல் புகாரில் சிக்கிய பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை, சஸ்பென்ட் செய்து தெலங்கானா திரைப்பட வர்த்தக சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடனம் வடிவமைத்தவர் நடன இயக்குநர் ஜானி. இவர் மீது 21 வயது பெண் ஒருவர் சைபராபாத் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அதில் பல ஆண்டுகளாக ஜானி தம்மை வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து ஜானி மீது 3 பிரிவுகளில் நார்சிங்கி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தெலங்கானா நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி நீக்கப்பட்டார். மேலும் தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையில் இருந்து ஜானியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சபையின் நடவடிக்கை காரணமாக தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் இனி ஜானி பணியாற்ற இயலாது.